கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

சென்னையில் கள்ள தொடர்புக்கு இடையூராக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
x
சென்னை  நெற்குன்றத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான நாகராஜ் காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் நாகராஜூக்கு சந்தேகம் ஏறபட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்ரி வீட்டை விட்டு சென்று விட்டார்.  இந்நிலையில் நாகராஜ் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காயத்ரி மற்றும் அவரது தோழி பானு ஆகியோருக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதற்கு நாகராஜ் இடையூராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் காயத்ரி பானுவுடன் சேர்ந்து நாகராஜை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்