கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காந்தி பூங்கா எதிரே 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களை அறிவித்தது போல, கும்பகோணத்தையும் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்