கத்தியைக் காட்டி மாமூல் கேட்ட பிரபல ரவுடி கைது

சென்னை காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கத்தியைக் காட்டி மாமூல் கேட்ட பிரபல ரவுடி கைது
x
சென்னை காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ குப்பத்தை சேர்ந்தவர் விஷால். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், விஷால் கத்தி முனையில் ஒருவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும், அவர் தப்பியோட முற்சித்துள்ளார். விஷாலை விரட்டிப்பிடித்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்