மாமூல் கேட்டு கட்டுமான நிறுவன மேலாளர் மீது தாக்குதல், 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டியில் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு தனியார் கட்டுமான நிறுவன மேலாளரை தாக்கிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாமூல் கேட்டு கட்டுமான நிறுவன மேலாளர் மீது தாக்குதல், 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
சென்னை கிண்டியில் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு தனியார் கட்டுமான நிறுவன மேலாளரை தாக்கிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மடுவின்கரை பகுதியில் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு மேலாளராக உள்ள உமாபதியிடம், கட்டுமான பணிகளை தொடர ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கும்பல்,  அவரை கடுமையாக தாக்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாக்குதல் நடத்திய சீனிவாசன் என்பவரை மடக்கிப்பிடித்தனர். தப்பியோடிய ஆனந்த்குமார் உள்ளிட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்