2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்
2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி- தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக மூடிக் கிடப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்துக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அங்கு செல்வதற்கான சாலை மோசமாக பாதிக்கப்பட்டதால், ஒரு கோடியே 89 லட்சம்  ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, 2 மாதங்கள் கடந்த பின்னரும், திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால், உடனடியாக சாலையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்