மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று துவங்கப்பட்டது.
மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
x
விவசாயிகளின் கோரிக்கையை  தொடர்ந்து காரைக்கால்  மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று துவங்கப்பட்டது. இப்பணியினை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாசன வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரி ஆழப்படுத்தும் பணிகள் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மானாம்பேட்டை வழியாக கடைமடை பகுதிக்கு வரும் காவிரிநீரால் 2500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்