பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி - மத்திய அரசு மீது வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

பொதுத்துறை வங்கிகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக வங்கி ஊழியர் சங்கம் குற்றச்சாட்டி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி - மத்திய அரசு மீது வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
x
பொதுத்துறை வங்கிகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக வங்கி ஊழியர் சங்கம் குற்றச்சாட்டி உள்ளது. கடலூரில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், கிராம்ப்புறங்களில் வங்கிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே விவசாய கடன், கல்வி கடன், போன்றவற்றை வழங்குவதாக கூறிய அவர், தனியார் வங்கிகள் இத்தகைய கடன்களை வழங்குவதில்லை என்று தெரிவித்தார். இதனால், பொதுத்துறை வங்கிகள் எல்லாம் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்