மாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு

திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு
x
திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு, அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காங்கேயம் அருகே பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. கடந்த சில தினங்களாக இவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள், அருகில் உள்ள புதர் பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு, வால் துண்டாக்கப்பட்ட நிலையில் மீட்கப்படுவது தொடர்கதையாகி வந்தது.அங்குள்ள வடமாநில இளைஞர்கள் தான்,மாடுகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்