தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x
ராமேஸ்வரத்தையடுத்த  தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.மன்னார் வளைகுடா பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதனால் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 வது நாளாக கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் கடல் அலை சுமார் 15 அடி உயரத்திற்கு எழும்புவதால்  துறைமுகப் பகுதிக்கு யாரும் சொல்ல வேண்டாம் என போலீசார் தடை விதித்தனர். ஆனால் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு சென்று விளையாடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்