கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு
x
கர்நாடக அணைகளில் இருந்து , திறந்து விடப்பட்ட தண்ணீர், பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடகாவில் உள்ள  கிருஷ்ண சாகர், கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு தண்ணீர் வந்தடைந்தது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் மழை பெய்யுமானால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்