திமுக இளைஞரணி 40வது ஆண்டு விழா : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை

திமுகவின் இளைஞர் சக்தி, பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி 40வது ஆண்டு விழா : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை
x
திமுக இளைஞரணியின் 40வது ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள், உரம் போன்றவை என்றும் அவை மனதை திடப்படுத்தும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞர் சக்தி பலருக்கு வயிற்றெரிச்சலை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி, விமர்சனங்களுக்கான ஒரே பதில் செயல் மட்டுமே என கூறியுள்ளார்.  விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம் என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். 40 ஆவது ஆண்டை இளைஞரணி தொடும் போது அதன் செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை தனக்கு கிடைப்பதை நினைத்து ஒரு பக்கம் பெருமைபடுவதுடன், இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது, இதைவிட தனக்கு பெருமை என்ன வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்ட உதயநிதி, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்