முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய பரோட்டா மாஸ்டர் கைது

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய, பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய   பரோட்டா மாஸ்டர் கைது
x
முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய, பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் ஒருவர்,  முதலமைச்சரை கடுமையாக விமர்சித்ததுடன், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.அ​ழைப்பில் வந்த அந்த தொலைபேசி எண்ணை வைத்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருச்சி பகுதியில் இருந்து, அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்த ரஹமத்துல்லா என்பவர், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பரோட்டா மாஸ்டரான அவரை போலீசார் கைது செய்தனர். வேலை கிடைக்காத விரக்தியில், அவர் இந்த மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹமத்துல்லாவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்