ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர். ஸ்ரீ வேம்புலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வேம்புலி அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story