முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.
முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா
x
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கேரள அரசு மீறுவதாக கூறி, தமிழக அரசு கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை, விசாரணைக்கு வந்த போது,  நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கிறதா, என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் கேரள அரசு உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார கால அவகாசம் கோரி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்