நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்
நாச வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை மற்றும் நாகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக அசன் அலி, ஹாரிஸ் முகமது கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு, டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்தனர். இந்நிலையில், இவர்களை 8 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க, பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Next Story