புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில் பரபரப்பு : பல்வேறு கட்சியினர் புகுந்து வாக்குவாதம்

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டம் நடைபெற்றது,
புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில் பரபரப்பு : பல்வேறு கட்சியினர் புகுந்து வாக்குவாதம்
x
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டம் நடைபெற்றது, இதில் 7 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் புகுந்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், கருத்துக் கேட்பு கூட்டம் குறித்து கல்வியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் வெளியேறச் சொல்லியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இது துறை ரீதியான கூட்டம் என்றும்  கருத்துக்கேட்பு கூட்டம் என, தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்