நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை : சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை : சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு
x
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால், நீர்வரத்து முற்றிலும் இன்றி, நீர் மட்டம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக அணைக்கு தற்போது வினாடிக்கு 15 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 68  புள்ளி 88 அடியாகவும், நீர்இருப்பு 29 புள்ளி 12 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்