முதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : "9 பெரியதா ? 13 பெரியதா ? - ஸ்டாலின் கேள்வி
சட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக அரசு மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்பது இடங்களில் அதிமுகவிற்கு மக்கள் வெற்றி அளித்திருப்பதாக கூறினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் திமுகவிற்கு 13 இடங்களில் மக்கள் வெற்றி அளித்திருக்கும் நிலையில், ஒன்பது பெரிதா அல்லது 13 பெரிதா என்று கேள்வி எழுப்பினார்.
Next Story