நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் - பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் - பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
x
விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் காமராஜ் இவ்வாறு பதிலளித்தார்.தமிழகத்தில் ஆயிரத்து 866 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும்,  இதன் மூலம் 4 லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து உள்ளதாகவும் கூறினார். நெல் வளர்ச்சி தேவையை கருத்தில் கொண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்