அரிக்கமேட்டில் மீண்டும் அகழ்வாய்வு நடத்துவது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்

புதுச்சேரி மாநிலம் அரிக்கமேட்டில் மீண்டும் அகழ்வாய்வு நடத்துவது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அரிக்கமேட்டில் மீண்டும் அகழ்வாய்வு நடத்துவது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்
x
புதுச்சேரி மாநிலம் அரிக்கமேட்டில் மீண்டும் அகழ்வாய்வு நடத்துவது தொடர்பாக  மக்களவையில் விவாதிக்க கோரி, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த அகழ்வாய்வு இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே நடந்து வந்த வணிக உறவின் காலத்தைத் தெளிவாக நிரூபணம் செய்தன என்றும், இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்  உள்ள அரிக்கமேட்டில், கடந்த 40 ஆண்டுகளில்  எந்த ஒரு அகழ்வாய்வும் நடத்தப்படவில்லை என்றும் தமது நோட்டீசில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அரிக்கமேட்டில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அதில்  ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்