ஏடிஎம்மில் உதவுவது போல பெண்ணிடம் ஏடிஎம் கார்டு திருட்டு
அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பார்வதி அங்குள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பார்வதி அங்குள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பார்வதிக்கு பணம் எடுக்க உதவுவது போல நடித்து அவரது ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நகைக்கடைக்கு சென்ற அந்த மர்ம நபர், பார்வதியின் கார்டை பயன்படுத்தி 18 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்வதி கொடுத்த புகாரின் பேரில், ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story