"டிக்டாக் செயலி தடை செய்யப்படும்" - அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் 'டிக் டாக் செயலி' தடை செய்யப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன்
x
தமிழகத்தில் 'டிக் டாக் செயலி' தடை செய்யப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை செய்ததை குறிப்பிட்டார். எனினும், தமிழக கலாச்சாரத்துக்கு விரோதமாக செயல்பட மாட்டோம் என கூறியதால், தடை நீக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தவறான தகவல்களை பகிர்வது மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால், மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி, நிச்சயம் 'டிக்டாக் செயலியை' தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்