ஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்

ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்
x
ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் பேசிய ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ. மகாராஜன், ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். குடம் 5 ரூபாய்க்கு தண்ணீர் வாங்குவதாக வேதனை தெரிவித்த எம்.எல்.ஏ மகாராஜன், இதற்கு நடவடிக்கை வேண்டும் என்றார். வைகை அணையை தூர்வாரினால், 1 டி.எம்.சி. சேமிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு, பதிலளித்த ஒ. பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்றும், எம்.எல்.ஏ. கூறியது போல், யாரும் அவரை மறிக்க மாட்டார்கள் என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்