தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்

நெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்
x
நெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வண்ணார்பேட்டை பரணி நகரைச் சேர்ந்த ராஜாராம், தாழையூத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காவலர் குடியிருப்பில் தூக்கில் தொங்கி, தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜாராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தமக்கு உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்