60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
x
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில்  அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட முயன்ற போது லாரியிலிருந்து ஓட்டுநர் மற்றும்  மூன்று நபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.ஓட்டுநரை தவிர  மூன்று பேரை துரத்திப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு சுமார் மூன்று டன் செம்மரக்கட்டைகளை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்