களைகட்டிய செல்லியம்மன் கோயில் திருவிழா - வீட்டுக்கு ஒருவர் வேடமணியும் வினோத திருவிழா

கடலூர் மாவட்டத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வீட்டுக்கு ஒருவர் வேடமணியும் வினோத திருவிழா நடைபெற்றது.
களைகட்டிய செல்லியம்மன் கோயில் திருவிழா - வீட்டுக்கு ஒருவர் வேடமணியும் வினோத திருவிழா
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரில் செல்லியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயில் வழக்கப்படி,  5 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட அம்மன் சிலை திருவிழாவை முன்னிட்டு வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அந்த வகையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வீட்டிற்கு ஒருவர் சிறப்பு வேடமணிந்து பங்கேற்கும் வினோத விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று, வித்தியாசமான வேடமணிந்து வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்