தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து : இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து : இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
x
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சுகுமாரன் , முத்துலட்சுமி , பாக்கியலட்சுமி மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 18 பேர் 
வேனில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் என்ற இடத்தில் சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்