மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் - மத கலவரத்தை தூண்டியதாக இளைஞர் கைது

கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் - மத கலவரத்தை தூண்டியதாக இளைஞர் கைது
x
கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடியரசு கட்சியின் தலைவர் சுந்தரின் மகனான எழிலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த அழைப்பை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் எழிலனை கைது செய்தனர். அவர் மீது  மத கலவரத்தை தூண்டியது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்