மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் அடுத்த நாச்சிக்குளம் பகுதியில், கனமழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதமானது.
மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதம்
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் அடுத்த நாச்சிக்குளம் பகுதியில், கனமழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதமானது. நாச்சிகுளம் அடுத்த கரட்டுப்பட்டியில் உள்ள பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இடியுடன் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்தில் இருந்த வேப்ப மரம் ஒன்று முறிந்து, பள்ளிக் கட்டடத்தில் விழுந்தது. இதில், மேற்கூரை முற்றிலும் சேதமானது. மாலை நேரம் என்பதால், மாணவர்கள் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே, பள்ளிக் கட்டத்தை சீரமைத்து தருமாறு, அப்பகுதியினர் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்