மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்

கடனை திருப்பி கேட்ட தகராறில், மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
x
தாம்பரம் அடுத்த பம்மல் நல்லதம்பி சாலையைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர், தமது மாமா பஷீர் முகமதுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இந்த பணத்தை நீண்ட காலமாக திருப்பி தராததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, அதை அறிந்த பஷீர் அகமதுவின் மகன் ஒசாமா காதர் அலி , முகமது அலி வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த முகமது அலி, ஒசாமா காதர் அலி வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஒசாமா காதர் அலி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக, போலீசார் முகமது அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்