சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர்.
சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
x
சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர். ஜெகநாத் ராவத் கடந்த 2 தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எலும்புகள் உடைந்த நிலையில் ஜெகநாத் ராவத் சடலமாக கிடந்தார். அவருடன் தங்கி இருந்த ஜஸ்வந்த் மாயமான நிலையில், அவரின் செல்பொன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஜெகநாத் ராவத்தை ஜஸ்வந்த் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்