நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் : தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் : தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
x
தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் உள்ள 7  நிர்வாகக் குழு உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக மற்றும் அமமுக கட்சிகளை சேர்ந்த 22 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், 10 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக அதிமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்