ஒரு கிலோ தங்கத்தை ரூ.30 லட்சத்துக்கு தருவதாக ஆசை வார்த்தை : 2 பேர் கைது, 6 பேர் தப்பி ஓட்டம்

ஒரு கிலோ தங்கத்தை 30 லட்ச ரூபாய்க்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரை காரில் கடத்திய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ தங்கத்தை ரூ.30 லட்சத்துக்கு தருவதாக ஆசை வார்த்தை : 2 பேர் கைது, 6 பேர் தப்பி ஓட்டம்
x
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ராம்ஜுல்ரெட்டி. தொழிலதிபரான இவரை தொடர்பு கொட்ண நெல்லையை சேர்ந்த கும்பல், சுங்கத்துறையில் பிடிபட்ட ஒரு கிலோ தங்கத்தை 30 லட்ச ரூபாய்க்கு தருவதாக கூறியுள்ளது. இதனால் சென்னை கிளம்பி வந்த அவரை விமான நிலையத்தில் இருந்து 8 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. நெல்லை சேர்ந்தமரம் பகுதிக்குள் கார் வந்ததும் ராம்ஜுல்ரெட்டி சத்தம் போட்டு அலறியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று பிடித்து ராம்ஜூல் ரெட்டியை மீட்டனர். அப்போது காரில் இருந்த கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. ஆனால் அவர்களை தொடர்ந்து துரத்திச் சென்ற பொதுமக்கள், வசந்தகுமார், முத்துக்குமார் ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தொழிலதிபரிடம் இருந்து மிரட்டி வாங்கிய 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்