பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா
x
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு வெளிப்படை தன்மையாக இருப்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து அமைப்புகள் அவசியம். பல மாநிலங்களில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கமிஷன்,கரப்ஷன்,கலக்சன், நிலவுகிறது. இப்படி இருந்தால்  வெளிப்படைத்தன்மை இருக்காது.

Next Story

மேலும் செய்திகள்