கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் : உடல்நிலை கவலைக்கிடம்...

கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் : உடல்நிலை கவலைக்கிடம்...
x
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண்டைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கக்கோரி அவரது மகன் சரவணன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில் ராஜகோபாலின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபாலின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பொறுப்பையும், செலவையும் தாங்களே ஏற்று கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்து உத்தரவிட்டனர். அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்