ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த நீலகண்டன்  தாக்கல் செய்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்