தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்
x
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி,  பண மோசடி செய்த ஏஜெண்ட்  மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.திருப்பூர் மாவட்டம் குளத்தூர்புதூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாள், தமது இரு மகன்களை ஏஜெண்ட் ரஞ்சித் மூலம் தாய்லாந்துக்கு அனுப்பினார். ஆனால், அங்கு சரியான வேலையை ஏற்பாடு செய்யாமல் ஏஜெண்ட் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. வேலையின்றி தாய்லாந்தில் தவித்த மகன்களை சொந்த செலவில் மீட்ட தாய், ஏமாற்றிய ஏஜெண்ட்  மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்