தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது
x
விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்த சண்முகம், அவரின் மனைவி பரமேஸ்வரி மற்றும் சகோதரர் ஆதிமூலம் ஆகிய 3 பேரும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்த புகாரில் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், அத்தியூர்திருக்கையில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சண்முகம்,  வந்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள், சண்முகத்தை மடக்கிப்பிடித்து கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்