மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி மனு - சுகாதார செயலரிடம் விளக்கம் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக புதிய பட்டியல் வெளியிட கோரும் வழக்கில் சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் பெறுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி மனு - சுகாதார செயலரிடம் விளக்கம் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக, புதிய பட்டியல் வெளியிட கோரும் வழக்கில், சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் பெறுமாறு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநில மாணவர்களை நீக்கி, புதிய பட்டியல் வெளியிட கோரி, மதுரையைச் சேர்ந்த மூவர் மனு தாக்கல் செய்தனர். இதில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், நடைபெறும் கலந்தாய்வை ரத்து செய்யவும் கோரியிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சுகாதாரத் துறை செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்