சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை...

சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை தாம்பரத்தை அடுத்த கடப்பேரி அற்புதம் நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற புட்டி சுரேஷ். இவரது நண்பர் பிரதீப் குமார் என்கிற சின்னா அப்புனு. பிரபல ரவுடிகளான இவர்கள் கடந்த 2018ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இன்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த மர்மகும்பல், இவர்கள் 2 பேரையும் வழிமறித்தது. அரிவாளால் இரண்டு பேரையும் சரமாரியாக வெட்டியதில் சுரேஷூம், பிரதீப் குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 பேரின் சடலங்களை மீட்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே பாபு என்கிற காக்கா முட்டையுடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்