சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக கணவர் : மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு

நெல்லை மாவட்டம் தென்காசி அணைக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.
சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக கணவர் : மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு
x
நெல்லை மாவட்டம் தென்காசி அணைக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு, சவூதி அரேபியா நாட்டிற்கு தோட்ட வேலைக்கு சென்றிருந்தார். ஆனால், அழைத்து சென்ற நிறுவனம் ஆறுமுகத்தின் பாஸ்போர்டை பறித்துக்கொண்டு, அங்கு பாலைவனத்தில் சம்பளம் இன்றி கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தொலைபேசி மூலம் தனது மனைவி பேச்சியம்மாளிடம் ஆறுமுகம் கூறி உள்ளார். இதையடுத்து, தனது 3 குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அந்த பேச்சியம்மாள், தனது கணவரை மீட்க கோரி, ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்