ஆலங்குடியில் இரு பிரிவினரிடையே மோதல் - பதற்றம் : போலீசார் குவிப்பு - 11 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குடியில் இரு பிரிவினரிடையே மோதல் - பதற்றம் : போலீசார் குவிப்பு - 11 பேர் மீது வழக்குப்பதிவு
x
ஆலங்குடியில்  இந்து முன்னணியை சேர்ந்த முருகானந்தத்திற்கும் ஜகுபருல்லா என்பவருக்கும் இடையே பேனர் வைப்பது தொடர்பாக 
வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜகுபருல்லா மற்றும் அவரது நண்பர்கள் முருகானந்தம் மற்றும் அவரது தந்தை கணேசனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த  காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முருகானந்தம் தரப்பினர் ஜகுபருல்லா ஆதரவாளர்களின் கடைகளை அடித்து நொறுக்கியதாகவும்,  முஸ்தபா என்ற இளைஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால்  ஆலங்குடியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் 
நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்