பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு : துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி , திருவெறும்பூரில் இலகு ரக ஆயுதங்களை தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கனரக படைக்கலன் தொழிற்சாலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு : துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
திருச்சி ,  திருவெறும்பூரில் இலகு ரக ஆயுதங்களை தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கனரக படைக்கலன் தொழிற்சாலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினருக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, துப்பாக்கி தொழிற்சாலை வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்