72 குளங்களை தூர்வார காங்கிரஸ் கட்சி திட்டம் - தாம்பரத்தில் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி
தமிழகம் முழுவதும் 72 குளங்களை தூர்வார, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பல லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மக்களுக்கு குடிநீர் வழங்க தவறியதால், காந்தி கிராம சேவை செய்தது போல, காங்கிரஸ் கட்சியினரும் 72 குளங்களை தூர்வார திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் இந்தி, குஜராத் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால், மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே, மத்திய அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், கூட்டாட்சி முறையில் தமிழகத்திற்கான உரிமையை வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story