எஸ்.சி.,எஸ்.டி ஆணையத்தின் சிறப்பு முகாம் : தமிழக அரசு பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜர்
தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் முன், தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் அவர்களது பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.
தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் முன், தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் அவர்களது பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர். சென்னை விமானநிலையத்தில் பேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் துணை தலைவர் முருகன், இந்த தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் , மரணங்கள் உள்ளிட்ட வழக்குகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதா என்பன உள்பட பல விஷயங்கள் குறித்து தமிழக பிரதிநிதிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என அவர் கூறினார்.
Next Story