தமிழகத்தில் தொடரும் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
தமிழகத்தில் தொடரும் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
பள்ளிபாளையம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. இந்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஆத்தூர் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  மழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



தஞ்சை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, நாஞ்சிக்கோட்டை,  செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழையில் நனைந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம்

கும்பகோணம் நகரம் மற்றும் அசூர், தாராசுரம், பெருமாண்டி, கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. கடந்த 6 மாதங்களாக  மழையின்றி வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள், மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்