ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை : மறுநாளே சிதைந்து போன அவலம்

திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மறுநாளே சிதைந்து போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை : மறுநாளே சிதைந்து போன அவலம்
x
திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மறுநாளே சிதைந்து போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கன்னிவாடி அருகேயுள்ள ஸ்ரீராமபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. நள்ளிரவில் அமைக்கப்பட்ட இந்த சாலை, மறுநாளே ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்