சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் இளைஞர்கள் : இளைஞர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள ஏரி ஒன்றை, தாமாக முன்வந்து இளைஞர்கள் தூர்வாரி வருவது, அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றது.
சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் இளைஞர்கள் : இளைஞர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு
x
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள ஏரி ஒன்றை, தாமாக முன்வந்து இளைஞர்கள் தூர்வாரி வருவது, அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றது. செய்யாறு பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 'செய்யாறு சீரமைப்புக்குழு' என்ற அமைப்பின் மூலம் நீர் நிலைகளை தூர்வாரி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளுவர் நகர் பகுதியில், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, வரத தாங்கல் ஏரியை தூர்வாரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த குழுவினர், சொந்த செலவில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியும், ஏரியின் கரையைப் பலப்படுத்தியும் வருகின்றனர். இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்