நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்

ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ 9 லட்சத்து 59 ஆயிரம் கொள்ளை போன வழக்கில் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்
x
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் ஏடிஎம் வாகனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று நடமாடும் ஏடிஎம் வாகனத்தின் மின் சாதன பொருட்களில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் தீயை அணைத்து  உடனடியாக வங்கிக்கு வாகனத்தை ஓட்டி வந்து ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணம் பத்து லட்சத்தை பார்த்தனர். அப்போது இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடமாடும் ஏடிஎம்மில் தகவல் சேமிப்பாளர் சரவணன் என்பவர் வண்டியில் உள்ள பேட்டரியில் பெட்ரோலை தெளித்து தீயை பற்றவைத்து,  ஏடிஎம்மில் இருந்த 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாயை திருடியுள்ளார். சரவணையை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்