கொடைக்கானல் : சீசன் முடிந்தும் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பகுதியில் சீசன் முடிவடைந்த நிலையிலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் : சீசன் முடிந்தும் குவியும் சுற்றுலா பயணிகள்
x
கொடைக்கானல் பகுதியில் சீசன் முடிவடைந்த நிலையிலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் வெப்பம் நிலவினாலும் பிற்பகல் முதல் அடர்ந்த மேகமூட்டமும் லேசான சாரல் மழையும் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் உற்சாகமாக ஈடுபட்டதுடன் பிரையன்ட்பூங்காவில் பூத்து இருந்த ஆயிரக்கணக்கான மலர்களை கண்டு களித்தனர். அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்